நவாலியில் நினைவுத்தூபிகளை சேதப்படுத்தியோர் கைது!

யாழ். நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவுத் தூபிகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளுக் குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து குறித்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். … Continue reading நவாலியில் நினைவுத்தூபிகளை சேதப்படுத்தியோர் கைது!